Related posts

Breaking News

சத்தமின்றி யுத்தம் செய்-ட்யுராங்கோ(Durango)


மேற்குலகில் காமிக்ஸ் என்னும் விதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே
விதைக்கப்பட்டுவிட்டது.இன்று விருட்சமாக வளர்ந்து கிளை விட்டிருக்கும் அதை எப்பேர்ப்பட்ட கோடாரி கொண்டும் வெட்டிவிட முடியாது.

ஆனால் இங்கோ நிலைமையையே வேறு.காமிக்ஸ் அதுவும் தமிழில்,மெல்லிய காற்றுக்கே சரிந்து விடக்கூடிய கட்டமைப்பில்தான் அது உள்ளது.இப்படியான நிலையில் இருந்து கொண்டு ஒரு நிறுவனம் அதுவும் தமிழில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரக்கதைகளை வெளியிட்டு கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது சாதாரண விடயமல்ல.முதலுக்கே வேட்டு வைத்து விடக்கூடிய நட்ட அச்சம் நிகழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் ஒரு தொழிலில் நேரான பாதையில் தளர்வின்றி பயணிக்கும் லயன்,முத்து குழுமத்துக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

முத்து நிறுவனத்தினரின் 45வது ஆண்டு நிறைவாக வெளிவந்திருக்கும் இதழ்தான் ட்யுராங்கோ(பிரித்தானிய உச்சரிப்பில் டுராங்கோ என நினைக்கிறேன்). 1981ல் பிரான்கோ பெல்ஜிய காமிக்ஸ் கதாசிரியரும் ஓவியருமான Yves Swolfs அவர்களின் கைவண்ணத்தில் உருவான கதைதான் ட்யுராங்கோவினுடையது (இதில் Thierry Girod என்ற ஓவியரும் தற்போதுவரை பணியாற்றிக்கொண்டிருக்கிறார்).

80 களுக்கேயான ஈன்ஸ்மண்ட கலர் ஓவியங்கள் + ஒரு சாதரணமான அலட்டலில்லாத கதை என எனக்கு மிகவும் பிடித்தமான பாணியில் கதை செல்கிறது.வெகுமதி வேட்டையனான (அதே நேரம் கூலிக்காக கொலைகளையும் செய்பவன்) ஹீரோ, தனது சகோதரனை சந்திப்பதற்காக அவனது ஊருக்கு பயணப்படுகிறான்.தனது சகோதரனை ஒரு கும்பல் கொன்று விட்டது என்னும் உண்மை அந்த நகரிற்கு சென்ற பின்னர்தான் அவனுக்கு தெரிய வருகிறது .அதன்பின் அவன எவ்வாறான நகர்வுகளை எடுத்து வைக்கிறான் என்பதே கதை.இது முதலாவது அத்தியாயத்தின் கதை மட்டுமே.அதனில் இருந்து பல கிளைக்கதைகள் வேர்விடுகின்றன (ஆரம்பம் முதலே மரம், கிளை, வேர் என உவமித்துக்கொண்டிருக்கிறேன் என்பதால் ஏதும் நினைத்து விடாதீர்கள், எல்லாம் ஒரு continuityகாக தான்😆).

ஓவியங்களாகட்டும் கதையாகட்டும் ஆஹா ஓஹோ பாணியில் இல்லையென்றாலும் ரசிக்கும் படியாகவே உள்ளது.ஆங்காங்கே ஓவியங்களின் மீது ஒற்றை வர்ணத்தை தெளித்து விட்டிருக்கிறார் Yves.அதனை சற்றே சீர்படுத்தியிருக்கலாம்.கதையும் மிகச் சில இடங்களில் போரடிக்கிறது. மற்றபடி பெரிதாக குறை என்று சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை.காமிக்ஸ் மீது அதுவும் வன்மேற்கின் கௌபாய் கதைகள் மீது ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு தடவை முயற்சிக்கலாம்.

No comments

//]]>