Related posts

Breaking News

சந்தோஷமாக நஞ்சுண்ணுங்கள்



நார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு "உங்களுக்கு லேசாகதான் சுகர் இருக்கு,இந்த மருந்த டெய்லி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்"னு 100mgல் ஒரு மருந்தை கொடுப்பார்.நாமும் ஒரு கிழமைக்கு அதை வாங்கி குடிப்போம்.அதுவும் சரியாகிவிடும்தான்.அதன் பிறகு ஒரு மாதத்திற்கு அந்த மருந்தையே தொட மாட்டோம்.தீடிரென உடல் பலவீனமானதுபோல் தெரியும் .மீண்டும் வைத்தியரிடம் சென்றால் "மருந்த ஸ்டொப் பண்ணாம குடிங்க,ஃபுட் ஹெபிட்ஸ் கன்ட்ரோலா இருங்க"னு அதே மருந்தை இந்த முறை 200mg எழுதி கொடுப்பார்.
(இங்கே நீங்கள் சுகருக்கு பதிலாக கொலஸ்ரோல்,உயர்/தாழ் குருதி அமுக்கம்,இளைப்பு,வயிற்றெரிச்சல் அல்லது உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எந்த நோயையும் போட்டுகொள்ளலாம்).

இந்த முறை நீங்கள் உணவு பழக்கத்தை கொஞ்சமாக கட்டுபடுத்துவீர்கள்.மருந்தையும் தொடர்ந்து குடிப்பீர்கள்.ஆனாலும் சுகர் ஏறும்.பத்து வருடங்கள் கழித்து உங்களால் உங்களுக்கு பிடித்த ஒரு உணவையும் சாப்பிட இயலாது.ஆனால் மருந்தின் அளவோ 800mg மாக மாறியிருக்கும்.இது மிடில் கிளாஸுக்கு, பணக்காரனுக்கோ தினமும் இன்சுலின்.

ஒரு குடிகாரனுக்கு எப்படி ஒரு கட்டத்திற்கு மேல் அவனே நினைத்தாலும் குடியை நிறுத்த முடியாமல் கைகள் நடுங்கி உடல் மெலிந்து அவனை  மரணம் வரை கொண்டு செல்லுமோ அதேபோல்தான் இந்த மருந்தும்.ஒரு நாள்,ஒரு வேளை நீங்கள் மருந்து குடிக்கா விட்டாலும் மயக்கம் வரும் தலை சுற்றும்.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாமே மெடிக்கல் ஷாப்பில் அந்த மருந்தின் பெயரை சொல்லி வாங்கிக்கொள்ள தொடங்கிவிடுவோம்.



நமக்கெல்லாம் நாம் சாப்பிடும் பொருட்களிலேயே நோய்களுக்கான கரு இடப்பட்டுவிடுகிறது.பால்மா தொடங்கி அரிசி வரை அனைத்து சந்தைகளிலும் வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு.நம்நாட்டில் தயாரிக்கும் பாலை விட வெளிநாட்டுபால்தான் நம் கண்களுக்கு தரமானது.Anchor பால்மாவில் DCD (Dicyandiamide) எனப்படும் வெடிப்பொருட்களை தீப்பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை எரிபொருள் கலந்திருப்பதாக கூறி சில காலம் அரசு அதை தடைசெய்திருந்தது.இதே நிலைமைதான் Milgro என்ற நிறுவனத்திற்கும்.ஆனால் Anchor தடை நீக்கப்பட்டுவிட்டது(பாவம் Milgro நிறுவனத்திற்கு பெரிய பணபலமில்லை போலும்)

நமக்கு நம் பட்ஜெட்டிற்கு ஏற்றமாதிரிதான் நோய்களை தருகிறார்கள்.மாதமாதம் Rs.30000 செலவழித்து நம்மால் மருந்து வாங்க முடியாது.அதனால் நமக்கு Rs2000-3000 என நமது பட்ஜெட்டுக்கு பொருந்துகிற மருந்துகள்தான் விற்கப்படுகின்றன அல்லது வாங்கவைக்கப்படுகின்றன.நாம் தினமும் வாங்கும் பொருட்களுக்கேற்பவே நம் நோயும் மருந்தும் தீர்மானிக்கப்படுகிறது.

இதே பணக்காரன் 69 years Old வைன் போன்ற உயர்ரக பொருட்களையே தினமும் வாங்குவான்,அவனுக்கு தீவிரமான நோய்கள் வரும்.அப்போதுதானே அவன் விலைக்கூடிய மருந்தை நுகர்வான்.நல்ல சந்தைபடுத்தல் தந்திரமல்லவா?

நாம் பொருளை வாங்க வேண்டுமென விளம்பரம் செய்யவார்கள்,அதை நம்பி நாம் வாங்கினால் நோய் வரும்,நோய் வந்தால் மருந்து எடுக்க வேண்டும்,மருந்து கொடுப்பது யார் காப்பிரேட்டட் கம்பனி,நோய் முற்றினால் எடு லோனை,போடு வங்கிக்கு கோலை.வங்கியும் ஒரு காப்பரேட் நிறுவனம்தானே.அப்படி இல்லையா இருக்கவே இருக்கிறது இன்ஷுரன்ஸ்,இப்படியெல்லாம் நமக்கு நோய் வரும் என அறிந்து எப்போதோ நம்மை இன்ஷுரன்ஸ் எடுக்க வைத்து விடுவார்கள்.இன்ஷூரன்ஸ் அதே கூட்டிணைக்கப்பட்ட கம்பனி,எடுத்த காசை மருத்துமனையில் கட்டு,காசை கட்டியபின் தரும் ரசீதில் மருத்துவமனையின் பெயரை நன்றாக உற்று பார்.XYZ(Pvt)ltd என்றிருக்கும்.

ஆக மொத்தம் யார் யாரோ ஒரு சிலர் சந்தோஷமாக இருப்பதற்காக நாம் முதலீட்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் நம்வாழ்வின் சாராம்சமே.

2 comments:

  1. அருமையான சிந்தனைகள். பயனளிக்கக்கூடிய கருத்துக்கள். நல்லதொரு கட்டுரை வாசித்த நிறைவு. வாழ்த்துக்கள் தொடர்க முயற்சிகளை.

    ReplyDelete

//]]>